கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் இரு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சூடான் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அந்த அமைப்பு செவ்வாய்க்கிழமை கூடுவதாக இருந்தது. மேலும், வரும் வியாழக்கிழமையும் (மாா்ச் 19) மற்றொரு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், கரோனா வைரஸ் பிரச்னை காரணமாக அந்தக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.