தேனி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 44 பேர் மீது வழக்கு

தேனி மாவட்டத்தில் கரோனா தடுப்பு ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவை மீறிய 44 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 44 பேர் மீது வழக்கு


தேனி மாவட்டத்தில் கரோனா தடுப்பு ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவை மீறிய 44 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.

தேனி, ஆண்டிபட்டி, வைகைஅணை, கடமலைக்குண்டு, போடி, தேவாரம், உத்தமபாளையம், கூடலூர் ஆகிய ஊர்களில் கடைகளை  திறந்து  வைத்தும், தேவை எதுவுமின்றி இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தும்  ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவை மீறியதாக மொத்தம் 44 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். 

மாவட்டத்தில் காவல் நிலைய எல்லைகள் மூடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தேவையின்றி கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வெளியூர்களுக்குச் செல்லக் கூடாது என்று போலீஸார் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com