ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த முதியவர் ஒருவர் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று அந்த மாநில முதன்மைச் செயலர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே ஹைதிர்போராவை சேர்ந்த 65 வயதுடைய முதியவர் ஒருவர் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவருடன் தொடர்பில் இருந்து ஹைதிர்போராவை சேர்ந்த 4 பேருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே மகாராஷ்டிராவில் நேற்று முன்தினம் (மார்ச் 24) உயிரிழந்த இறந்த பெண்ணுக்கு கரோனா வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து கரோனாவால் உயிரிழந்ததோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.