இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 649 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்றுக்கு தோற்றுவாயான சீனாவின் வூஹானில் தற்போது வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கு மேல் பரவி, வளர்ந்த மற்றம் வளரும் நாடுகளையும் அச்சம் அடைய வைத்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 649 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் 124-பேருக்கும், கேரளாவில் 118-பேருக்கும், தமிழகத்தில் 26 பேருக்கும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கரோனாவுக்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தின் கன்னியாகுமரியில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.