திருப்பூர் மாவட்டத்தில் 1156 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்த்தி விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் என தெரிவித்தார்.
திருப்பூர் தென்னம் பாளையம் காய்கறி சந்தை மற்றும் அம்மா உணவகத்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் மாநகர ஆணையாளர் சிவகுமார் மற்றும் சுகாதார துறை அலுவலர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது சமூக இடைவெளியின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எடுத்துரைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் திருப்பூர் மாவட்டத்தில் வெளிநாடு சென்று வந்தோர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 1156 பேர் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் இவர்கள் இருப்பார்கள் எனவும் சமூக இடைவெளியை உறுதி செய்ய பொதுமக்கள் வெளியே வருவதை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் எண்கள் பகிரப்பட்டு உள்ளதாகவும் இதன் மூலம் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்து குறிப்பிட்ட நேரத்தில் சென்று பெற்றுக் கொள்ளலாம். டோர் டெலிவரிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் இந்த திட்டத்திற்கு பொது மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது எனவும் தெரிவித்தார்
பொருட்கள் விலை உயர்த்தி விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காய்கறிகள் விவசாய பிரிவு அதிகாரிகள் மூலம் விலை நிர்ணயம் செயய்ப்பட்டு உள்ளதாகவும் அதற்கு மேல் விலை உயர்த்தி விற்பனை செய்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அது போன்று விற்பனை செய்பவர்கள் குறித்து புகார் அளிக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்தார்.