லக்னௌ: உத்தரப்பிரதேச மாநில முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான விவேக் சிங்(64), தில்லியில் வெள்ளிக்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார்.
அவரது உடல் உத்தரப்பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு, அங்கு தகனம் செய்யப்படும் என்று குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
விவேக் சிங் முதன் முதலில் 1996 -இல் மாநில சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கல்யாண் சிங், ராம் பிரகாஷ் குப்தா மற்றும் ராஜ்நாத் சிங் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
விவேக் சிங் மறைவுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார், லல்லு பிரசாத் யாதவ் போன்றோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். விவேக் சிங் மறைவு கட்சிக்கு பெரும் இழப்பு என்று அஜய் குமார் கூறியுள்ளார்.