கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர், பெரம்பலூர், கடலூர் திரும்பியவர்களுக்கு கரோனா தொற்று

சென்னை கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்துவிட்டு அரியலூர், பெரம்பலூர், கடலூர் திரும்பிய வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு
கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர், பெரம்பலூர், கடலூர் திரும்பியவர்களுக்கு கரோனா தொற்று


சென்னை கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்துவிட்டு அரியலூர், பெரம்பலூர், கடலூர் திரும்பிய வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு அடுத்தடுத்து கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால் ஆரஞ்சு மண்டலமாக இருந்த அரியலூர், தற்போது சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை கோயம்பேடு சந்தையில்  வேலைபார்த்த வியாபாரிகள், தொழிலாளர்கள், அங்கு பணியாற்றிய காவல்துறையினர் என சுமார் 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கோயம்பேட்டில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும்படி கடும் கட்டப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டில் மொத்த விற்பனை கடைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கோயம்பேடு சந்தையில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் புதிதாக 2 சிறுவர்கள் உள்பட 29 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

கோயம்பேடு சந்தையில் இருந்து சரக்கு வாகனங்கள் மூலம் அரியலூர் வந்த 19 பேருக்கும், பெரம்பலூர் வந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து அரியலூர் சென்ற 40க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து 8 பேருடன் ஆரஞ்சு மண்டலமாக இருந்த அரியலூர் தற்போது சிவப்பு மண்டலமாக மாறுகிறது.

இதேபோன்று கடலூர் திரும்பிய 7 தொழிலாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்த 7 பேரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கோயம்பேடு பகுதியில் இருந்து கடலூர் திரும்பிய 600 தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com