ராணிப்பேட்டை: மாம்பாக்கம் கிராமத்தில் தங்கி இருந்த தெலங்கானா மாநில தொழிலாளர்கள் இரு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் கடந்த ஐந்து மாதங்களாக தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் சொந்த மாநிலத்திற்கு கலவை தாசில்தார் செ.ரவி முன்னிலையில் வியாழக்கிழமை இரவு இரண்டு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் ஆற்காடு வட்டாட்சியர் கே. இளஞ்செழியன் மாம்பாக்கம் வருவாய் அலுவலர் இளையராஜா கிராம நிர்வாக அலுவலர் சுகுமார் மற்றும் கிராம உதவியாளர்கள் உடனிருந்தனர்.