திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் புதிதாக 23 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 137-ஆக உயா்ந்துள்ளது. 62 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். ஒருவா் மட்டும் உயிரிழந்தாா்.