மேட்டூரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து: மின்வாரிய ஊழியர் சாவு

சேலம் மாவட்டம் மேட்டூரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் மின்வாய ஊழியர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 
மேட்டூரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து: மின்வாரிய ஊழியர் சாவு


சேலம் மாவட்டம் மேட்டூரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் மின்வாய ஊழியர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 

மேட்டூர் தொட்டில் பட்டியை சேர்ந்தவர் கோபால்(55). இவர் ஈரோடு மின் வாரிய அலுவலகத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தார்.

வெள்ளிக்கிழமை காலை ஈரோட்டிலிருந்து மேட்டூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். மேட்டூர் ஐடிஐ அருகே வந்தபோது எதிரே வந்த லாரி மோதியது. இதில் படுகாயமடைந்த கோபால் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மேட்டூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com