நாகை மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் நாகை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 49-ஆக உயர்ந்துள்ளது.
நாகை மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் நாகை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 49-ஆக உயர்ந்துள்ளது.

நாகை மாவட்டத்தில் ஏற்கெனவே 47 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதில், 45 பேர் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், நாகையை அடுத்த கொட்டாரக்குடி, ஒக்கூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு இளைஞர்களுக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியாகியுள்ளது.

இதையடுத்து, அவர்கள் இருவரும் நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

தொற்றுக் கண்டறியப்பட்ட இருவரும் அண்மையில் சென்னையிலிருந்து திரும்பியவர்கள்.  இருவரும் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டிருத்தவர்கள் ஆவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com