தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவாகி உள்ள நிலையில் தூத்துக்குடி, கடலூர், புதுச்சேரி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவாகி உள்ள நிலையில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சில இடங்களில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்தநிலையில் தூத்துக்குடி துறைமுகத்தில் சனிக்கிழமை ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
தொடர்ந்து காற்று பலமாக வீசும் என்பதால் ஞாயிற்றுக்கிழமை காலை 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதேபோன்று கடலூர்,புதுச்சேரி துறைமுகத்திலும் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஞாயிற்றுக்கிழமை காலை 8.35 மணிக்கு ஏற்றப்பட்டது.