சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பூக்காரத்தெருவில் வாடகை வீட்டில் வசிப்பவர் பாஸ்கரன் ஆசாரி. இவரது வீட்டில் கடந்த சனிக்கிழமை இரவு மின்வயரில் மின் கசிவு ஏற்பட்டது. அதன்பின் வயரில் தீ பரவி வீடு முழுவதும் தீ பிடித்து எரிந்தது. இதனால் வீட்டிலிருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஒடி வந்தனர்.
இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த தொலைகாட்சி, துணிமணிகள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் எரிந்து நாசமாகின. தீயணைப்புத்துறையினர் வந்து தீயை அணைத்தனர்.