திருவாடானை: திருவாடானை அருகே ஆர் எஸ் மங்கலத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நிணைவு நாளையொட்டி, காங்கிரஸ் கட்சி சார்பில் கரோனா நிவாரண உதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
இதில் வறுமையால் வாடும்,அடித்தட்டு மக்களுக்கு, சுமார் 100 குடும்பங்களுக்கு 5கிலோ அரிசி, காய்கனி தொகுப்புகள் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
நிவாரண உதவிகள் பெற்று கொண்ட ஏழை குடும்பங்கள், காங்கிரஸ் கட்சிக்கு தங்களது நன்றியினை தெரிவித்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாவட்ட தலைவர், ம.தெய்வேந்திரன் தலைமை வகித்தார், நகர் தலைவர், முகம்மது காசீம், மாவட்ட செயற்குழு உறுப்பினர், இராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.