சீர்காழி அருகே பொது ஏலத்தில் ஒருவர் அடித்துக் கொலை: 3 பேருக்கு காவலர்கள் வலைவீச்சு

சீர்காழி அருகே குளம் ஏலம் எடுப்பது மற்றும் மாந்தோப்பு அமைப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே நடைபெற்ற தகராறில் விவசாயி ஒருவர்
சீர்காழி அருகே பொது ஏலத்தில் ஒருவர் அடித்துக் கொலை: 3 பேருக்கு காவலர்கள் வலைவீச்சு

சீர்காழி அருகே குளம் ஏலம் எடுப்பது மற்றும் மாந்தோப்பு அமைப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே நடைபெற்ற தகராறில் விவசாயி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை காவலர்கள் தேடி வருகின்றனர்

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கூத்தியம்பேட்டை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன்(42) இவருக்கு திருமணமாகி ரமாதேவி என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். 

இந்நிலையில் புதன்கிழமை இரவு அந்த கிராமத்திலுள்ள பெருமாள் கோவில் பகுதியில் ஊர்க்கூட்டம் கூடியுள்ளது. இந்த கூட்டத்தில் ஊரில் உள்ள 3 குளங்களை ஏலம் விடுவது மற்றும் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் மாந்தோப்பு அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது  மாந்தோப்பு அமைப்பதற்கு சரவணன் ஆதரவாக பேசியதாகவும், இதற்கு  அதே ஊரை சேர்ந்த மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர்  இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் கோவில் இடத்தில் மாந்தோப்பு அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்கள் சரவணனை கடுமையாக தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதனையடுத்து கூட்டத்தில் இருந்தவர்கள் சரவணனை மீட்டு சிகிச்சைக்காக கொள்ளிடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் காவலர்கள் விரைந்து வந்து சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு நேரில் வந்த சீர்காழி டிஎஸ்பி வந்தனாவிசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து கொள்ளிடம் காவல் ஆய்வாளர் வனிதா தலைமையிலான காவலர்கள் கொலை வழக்குப்பதிவு செய்து சரவணனை கொலை செய்த 3 பேரை தேடி வருகின்றனர். 

இதற்காக ஆய்வாளர் சதீஷ் மற்றும்  தனிப்படை துணை ஆய்வாளர் புயல் புயல் பாலச்சந்திரன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருதரப்பினரிடையே மோதல் ஏற்படாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூத்தியம்பேட்டை கிராமத்தில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com