செங்குன்றம் பேரூராட்சி சமுதாய கூடத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, வியாழக்கிழமை மாதவரம் சட்டப்பேரவை திமுக உறுப்பினர் எஸ்.சுதர்சனம் தலைமையில் நடைபெற்றது.
செங்குன்றம் பேரூராட்சி முன்னாள் தலைவரும், திமுக நகர செயலாளருமாள ஜி.இராஜேந்திரன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்.
செங்குன்றம், புழல், காவாங்கரை, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இதில் செங்குன்றம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர்கள் விப்ரநாராயணன், இரா.ஏ.பாபு, சந்திரசேகர், திராவிடமணி உள்ளிட்ட பலர் இருந்தனர்.