ஸ்ரீவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் ஊர் சின்ன நாட்டாண்மை கத்தியால் குத்திக் கொலை. தடுக்க வந்த மகன் படுகாயம். கொலை செய்த வாலிபர் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் ஆஜரானார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது செங்குளம் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் பாலுச்சாமி (65) செங்குளம் பகுதியின் ஊர் சின்ன நாட்டாமையாக இருந்து வருகிறார்.
இந்த பாலுச்சாமி வியாழக்கிழமை காலை அந்த பகுதியில் உள்ள கண்மாய் மடை பகுதியில் நின்று கொண்டிருந்தார் அப்போது அதே பகுதியில் வசிக்கும் அருண் பாண்டியன் (30) என்ற வாலிபர் பாலுசாமியிடம் முன்விரோதம் காரணமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
அப்போது அருண்பாண்டியன் தான் வைத்திருந்த கத்தியால் பாலுசாமியை கத்தியால் குத்தி உள்ளார். அப்போது சத்தம் கேட்டு பாலுச்சாமி மகன் முனீஸ்வரன் (30) ஓடிவந்து தடுக்க வந்துள்ளார். அவருக்கும் கத்தி குத்து விழுந்துள்ளது .இதில் அவரும் காயமடைந்தார்.
காயமடைந்த இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பாலுசாமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர் .மேலும் முனீஸ்வரன் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
இதற்கிடையே பாலுச்சாமி கொலை செய்த அருண்பாண்டியன்ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் ஆஜரானார்.
இறந்த பாலுச்சாமி உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை தொடர்பாக நகர் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன் விரோதம் காரணமாக நடைபெற்றதா அல்லது இந்த கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என பல்வேறு கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று வியாழக்கிழமை காலையில் நடைபெற்ற இந்த கொலையால் செங்குளம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.