தேனியில் கரோனா பாதிப்பில் முதியவர் பலி

தேனி மாவட்டம், ஓடைப்பட்டியைச் சேர்ந்த 65 முதியவர் கரோனா பாதிப்பில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
தேனியில் கரோனா பாதிப்பில் முதியவர் பலி


தேனி மாவட்டம், ஓடைப்பட்டியைச் சேர்ந்த 65 முதியவர் கரோனா பாதிப்பில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

மாவட்டத்தில் கடந்த ஏப்.1-ம் தேதி முதல் மே 21-ம் தேதி வரை மொத்தம் 96 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஏற்கனவே போடியைச் சேர்ந்த பெண் உயிரிழந்தார். 50 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த 65 வயதுடைய முதியவர்   உயிரிழந்தார், இதனால் மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் 44 பேர் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com