ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் ப ணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள் அகில இந்திய அளவில் சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் அறிவித்த 8 மணி நேர வேலையை 12 மணிநேரம் ஆக்கிய மத்திய அரசை கண்டித்தும் ஊரடங்கு ஒட்டி அனைத்து தொழிலாளர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வலியுறுத்தியும் முறையாக சுகாதாரமான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வலியுறுத்தியும் சிஐடியு துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில் பேருந்து நிலையத்தில் வைத்து சங்கத் தலைவர் கருப்பையா தலைமையில் சமூக இடைவெளியுடன் கூடிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் திருமலை பேசினார். சிபிஎம் நகரச் செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் வீர சதானந்தம் சங்கத்தின் கிளை செயலாளர் தர்மர், பொருளாளர் ராமசுப்பிரமணியன், உள்ளிட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.