உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 53 லட்சத்தை கடந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 3,40,004 ஆக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனாவின் கோர தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. கரோனா தொற்றுக்கு உலகம் முழுவதும் இதுவரை 53,04,340 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,40,004 பேர் பலியாகியுள்ளனர். அதே நேரத்தில் தொற்று பாதித்தவர்களில் 2,158,569 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஒரே நாளில் உலகம் முழுவதும் 1,07,716 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர், 5,252 பேர் பலியாகியுள்ளனர்.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 27,61,185 பேர்களில் 44,582 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.