ஆர்.எஸ்.பாரதி கைது: அடுத்து தயாநிதிமாறனா? - எச்.ராஜா

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது என்று, பாஜக தேசிய பொதுச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.பாரதி கைது: அடுத்து தயாநிதிமாறனா? - எச்.ராஜா


சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது என்று, பாஜக தேசிய பொதுச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் அன்பகத்தில் நடைபெற்ற  திமுக இளைஞர் அணி கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு நீதிபதி பதவிகளை பெற்று தந்ததில், திமுக முக்கிய பங்காற்றியதாகவும், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக ஆர்.எஸ்.பாரதி மீது சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அவர் வருத்தம் தெரிவித்தார். 

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், பட்டியலின் மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக ஆர்.எஸ்.பாரதி மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

அந்த புகாரின் பேரில் மூன்று மாதங்களுக்கு பின்னர் இன்று சனிக்கிழமை அதிகாலை காவலர்கள் ஆர்.ஆர்.பாரதியை கைது செய்துள்ளனர். 

இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. அடுத்து காத்திருப்பு பட்டியலில் தயாநிதிமாறன்? என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தலைமைச் செயலாளரை சந்தித்த திமுக எம்பிக்கள் குழு தங்களை அவர் உரிய வகையில் மரியாதையாக நடத்தவில்லை என்று புகார் கூறியது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதிமாறன் தங்களை தாழ்த்தப்பட்டவர் போல தலைமைச் செயலாளர் நடத்தியதாக தெரிவித்தார். 

இதற்கு திமுகவின் கூட்டணி கட்சிகளே அதிருப்தி வெளிப்படுத்தியது. இதையடுத்து தனது பேச்சுக்கு தயாநிதிமாறன் வருத்தம் தெரிவித்தார். இந்த நிலையில்தான் அடுத்து காத்திருப்பு பட்டியலில் தயாநிதிமாறன்? என்று ராஜா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு முக்கியத்துவம் பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com