ஈரோட்டில்  பிளஸ் 2  மாணவர் தூக்கிட்டு தற்கொலை

காதலுக்கு தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால் பிளஸ் 2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஈரோட்டில்  பிளஸ் 2  மாணவர் தூக்கிட்டு தற்கொலை


ஈரோடு: காதலுக்கு தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால் பிளஸ் 2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஈரோடு கீழ்திண்டல்,  வள்ளியம்மை  நகரைச் சேர்ந்தவர்  விஜயன். இவரது மகன்  ஹரிஹர கோபாலகிருஷ்ணன் (18) பிளஸ் 2  தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்தார்.  இந்நிலையில்  ஹரிஹர கோபாலகிருஷ்ணன்  ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்த விஷயம் கேள்விப்பட்டு  மாணவரை, அவரது  தந்தை 
திட்டியதாக கூறப்படுகிறது.   

இதையடுத்து நேற்று மாலை  வீட்டில்  ஹரிஹர கோபாலகிருஷ்ணன் தூக்கு மாட்டிக்கொண்டார்.  அக்கம்பக்கத்தினர்  மாணவனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அவரை  பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com