சீர்காழி நகர வர்த்தக சங்கம் சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்

சீர்காழி நகர வர்த்தக சங்கம் சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவிபொருட்களை சனிக்கிழமை வழங்கி கௌரவித்தனர்.
சீர்காழி நகர வர்த்தக சங்கம் சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்


சீர்காழி: சீர்காழி நகர வர்த்தக சங்கம் சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவிபொருட்களை சனிக்கிழமை வழங்கி கௌரவித்தனர்.

சீர்காழி நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் 160 பேருக்கு நகராட்சி ஆணையர் பெ.தமிழ்செல்வி தலைமையில், நகர வர்த்தக சங்க தலைவர் எஸ்.கே.ஆர்.சிவசுப்பிரமணியன்,கரோனா நிவாரண உதவியாக அரிசி, மளிகை, காய்கினி ஆகிய தொகுப்புகளை வழங்கி,அவர்களது பணிகளை பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

நிகழ்வில் நகராட்சி பொறியாளர் வசந்தன், துப்புறவு அலுவலர் நாட்டராயன், பணிதள மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன்,வர்த்தக சங்க துணை தலைவர் கோவி.நடராஜன் மற்றும் திரளான வர்த்தகர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com