சேலம்: கரோனா பரவல் தடுப்பு பணி மற்றும் குடிமராமத்து திட்டப்பணிகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, இரண்டு நாள் பயணமாக சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு வெள்ளிக்கிழமை மாலை சேலம் வந்தார்.
தொடர்ந்து சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அதிகாரிகளுடன், கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்புப் பணி, நிவாரண உதவித் தொகை, குடிமராமத்து பணிகள், குடிநீர் திட்ட பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.திவாகர், மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ், மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.