பிகார் மாநில தொழிலாளர்கள் 307 பேர் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு

சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த பிகார் மாநில தொழிலாளர்கள் 307 பேர், சனிக்கிழமை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பிகார் மாநில தொழிலாளர்கள் 307 பேர் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த பிகார் மாநில தொழிலாளர்கள் 307 பேர், சனிக்கிழமை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், தனியார் தொழிற்சாலைகள், இதர நிறுவனங்களில் தங்கி  பணிபுரிந்த வெளி மாநிலங்களை சேர்ந்த, புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பும் பணியில், வாழப்பாடி வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

வாழப்பாடி பகுதியில் தங்கி பணிபுரிந்த பிகார் மாநில தொழிலாளர்கள் 307 பேர், சொந்த ஊருக்கு திரும்ப இணையவழியில் விண்ணப்பித்து இருந்தனர். இந்தத் தொழிலாளர்கள் 307 பேரையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பொருட்டு, வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து , வாழப்பாடி வட்டாட்சியர் ஜானகி, வருவாய் ஆய்வாளர் சங்கீதா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்பார்வையில், 10 அரசு விரைவு பேருந்ததுகளில்,   சேலம் சாரதா மகளிர் கல்லூரிக்கு சனிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனர்.

இவர்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு, இரவு 9.00 மணி அளவில், சேலம் ரயில் நிலையத்தில்  இருந்து புறப்படும் சிறப்பு ரயிலில் பிகார் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com