புவனேஸ்வர்: ஒடிசாவில் மேலும் புதிதாக 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மாநிலத்தில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,336 ஆக உயர்ந்துள்ளது.
சுகாதாரத் துறையின் அறிவிப்பின் படி, மாநிலத்தில் இதுவரை 1,336 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 832 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 497 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 6,767 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்ந்துள்ளது, 147 பேர் பயாகியுள்ளனர், இதையடுத்து பலி எண்ணிக்கை 3,867 ஆக அதிகரித்துள்ளது.