தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆத்தூரை அடுத்த தலைவன் வடலியில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் அரசு கல்லூரி மாணவன் சத்தியமூர்த்தி என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஆத்தூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, கொலையாளியை தீவிரமாக தேடிவருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
இதனிடையே கொலையாளியின் வீட்டினை அடித்து சேதப்படுத்தியுள்ளதாகவும் விசாரனையில் தகவல்.