கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணம்பாக்கம் ஊரட்சியில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சார்பில் கரோனா ஊரடங்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணம்பாக்கம் ஊராட்சியில் ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற நிவாரண உதவி வழங்கும் நிகழ்விற்கு கண்ணம்பாக்கம் ஊராட்சி தலைவர் சதீஷ் முன்னிலை வகித்தார்.
நிகழ்வில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஏ.என்.குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன், கண்ணம்பாக்கம் ஊராட்சி துணை தலைவர் விக்னேஷ்குமார், பெரிய ஓபுளாபுரம் கூட்டுறவு சங்க தலைவர் முல்லைவேந்தன் பங்கேற்றனர்.
தொடர்ந்து நிகழ்வில் 250 குடும்பத்தினருக்கு 1000 ரூபாய் மதிப்பிலான 10 நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
அதே போல கொண்டமாநெல்லூரில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார் ஏற்பாட்டில் 200 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்விற்கு சாணாபுத்தூர் ஊராட்சி தலைவர் அம்பிகா பிர்லா , ஒன்றிய கவுன்சிலர் இ.சீனிவாசன் முன்னிலை வகித்தனர்.