பஞ்சாபில் பசுமைப் பட்டாசு வெடிக்க நேரம் அறிவித்து முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,
“தீபாவளி மற்றும் குருநானக் ஜெயந்தி பண்டிகைக்கு பசுமைப் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் விலக்கு அளிக்கப்படுகிறது. இதனிடையே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் பட்டாசு வெடிக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, நவம்பர் 10 முதல் டிசம்பர் 1 வரை பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி நாளான நவம்பர் 14ஆம் தேதி இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரையும், குருநானக் ஜெயந்தியான நவம்பர் 30ஆம் தேதி காலை 4 மணி முதல் காலை 5 மணி வரை மற்றும் இரவு 9 மணி முதல் இரவு 10 மணி வரையும் பசுமைப் பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் தினத்தன்று, இரவு 11.55 மணி முதல் அதிகலை 12.30 மணி வரை வெடிக்கலாம்.” என தெரிவித்துள்ளனர்.