ஒடிசாவின் சட்டப்பேரவைக் கூட்டம் நவம்பர் 20 முதல் டிசம்பர் 31 வரை 40 நாள்கள் நடைபெறும் என சட்டப்பேரவைத் தலைவர் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஒடிசா சட்டப்பேரவைத் தலைவர் சூரியா நாராயண் பட்ரோ வெளியிட்ட செய்தியில்,
கரோனா விதிமுறைகளை கடுமையாக பின்பற்றி நவம்பர் 20 முதல் டிசம்பர் 31 வரை 40 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும். பேரவையில் பங்கேற்கும் அனைவருக்கும் 3 நாள்களுக்கு முன் கரோனா சோதனை செய்யப்படும்.
விடுமுறை இல்லாமல் தொடர்ந்து 40 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும். நாள்தோறும் சட்டப்பேரவை சுத்தகரிக்கப்படும் என தெரிவித்தார்.