குவைத் மாணவர்களுக்கு ஆன்லைனில் மட்டுமே தேர்வு

குவைத் நாட்டில் கரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை மாணவர்களுக்கு இணையவழியில் மட்டுமே தேர்வு நடத்த வேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

குவைத் நாட்டில் கரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை மாணவர்களுக்கு இணையவழியில் மட்டுமே தேர்வு நடத்த வேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

குவைத் நாட்டின் கல்வித்துறை மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதற்காக சுகாராத்துறையிடம் கோரிக்கை விடுத்தது.

அந்தக் கோரிக்கையை நிராகரித்து கரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் இணையவழி மூலமாக மட்டும்தான் தேர்வு வைக்க வேண்டும் என சுகாதாரத் துறையின் துணை செயலாளர் டாக்டர் முஸ்தபா ரெடா தெரிவித்தார்.

குவைத் நாட்டில் இதுவரை 1,34,932 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 830 பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com