சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பூபேஷ் பேசுகையில்,
“சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நக்சல் பிரச்னைகள், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் விரிவாக விவாதித்தோம்.
மேலும், மாநிலத்தில் உள்ள பிரச்னைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.” என தெரிவித்தார்.