உ.பி.யில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் காயம்

உத்தரபிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளதாக புதன்கிழமை காவல்துறைவினர் தெரிவித்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உத்தரபிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளதாக புதன்கிழமை காவல்துறைவினர் தெரிவித்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் ஃபதேபூரிலிருந்து பிகார் மாநிலம் ஜஹானாபாத்திற்கு 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது.

இந்த பேருந்து சந்த்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாட்ரி கிராமம் அருகே காலை 10 மணியளவில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் 12 பேர் காயமடைந்தனர், அவர்களில் 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com