அதி தீவிர புயலாக ‘நிவர்’ கரையைக் கடக்கும்

நிவர் புயல் கரையைக் கடக்கும் போது அதி தீவிர புயலாக கடக்கும் என தெரிவித்துள்ளனர்.
நிவர் புயல்
நிவர் புயல்

நிவர் புயல் கரையைக் கடக்கும் போது அதி தீவிர புயலாக கடக்கும் என தெரிவித்துள்ளனர்.

நிவர் புயல் சென்னையில் இருந்து 430 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில் நாளை மாலை கரையைக் கடக்கும் போது அதி தீவிர புயலாக மாறி 120 முதல் 145 கி.மீ. வேகத்தில் கடக்கும் என தெரிவித்துள்ளனர்.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் பின்னா், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறியது. இது, செவ்வாய்க்கிழமை காலை வலுவடைந்து புயலாக வலுவடைந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com