கேரள வழிபாட்டுத் தலங்களில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி

கேரள வழிபாட்டுத் தலங்களில் ஒரே நேரத்தில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என கேரள முதல்வர் அறிவித்துள்ளார்.
சபரிமலை(கோப்புப் படம்)
சபரிமலை(கோப்புப் படம்)

கேரள வழிபாட்டுத் தலங்களில் ஒரே நேரத்தில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என கேரள முதல்வர் அறிவித்துள்ளார்.

கேரளத்தில் நாளுக்கு நாள் தொற்றின் நேரம் அதிகரித்து வரும் நிலையில் தொற்றின் வேகத்தை தடுக்க கேரள அரசு பல்வேறு கட்டுபாடுகளை அறிவித்து வருகின்றனர்.

அதன்படி, இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில், கேரளத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் ஒரே நேரத்தில் 20 பெர் மட்டுமே அனுமதிக்கப்படுவர், மேலும் கோவில்களில் சிறப்பு பூஜை, மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களில் பிராத்னைகள் செய்யப்படும் நேரங்களில் மட்டும் 40 பேர் வரை அனுமதிக்கலாம் என அறிவித்துள்ளார்.

இன்று கேரளத்தின் கரோனா பாதிப்பு எண்ணிககை 10,606 என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com