ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வெவ்வேறு இடங்களில் நடத்திய தாக்குதலில் 10 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர், 3 பேர் காயமடைந்துள்ளனர்.
ஷாபூல் மாகாணத்தின் ஷாஹர்-இ-சஃபா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பாதுகாப்பு சோதனைச் சாவடியில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 6 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்.
அதே நாளில் காபூல் மாகாணத்தின் கிரெஷ்க் மாவட்டத்தில் உள்ள யாக்சால் பகுதியில் தலிபான்கள் நடத்திய மற்றொரு தாக்குதலில் இரானுவ வீரர்கள் 4 பேர் பலியாகியுள்ளனர், 3 பேர் காயமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.