மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மருத்துவமனையில் அனுமதி

மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் சிறுநீரகத்தில் உள்ள கல்லை அகற்றுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் பியூஷ்கோயல்
மத்திய அமைச்சர் பியூஷ்கோயல்

மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் சிறுநீரகத்தில் உள்ள கல்லை அகற்றுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து பியூஷ் வெளியிட்ட டிவிட்டரில்,

சிறுநீரகத்தில் உள்ள கல்லை அகற்றுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன், விரைவில் திரும்பி வருவேன் என கூறியிருந்தார். 

கடந்த வாரம், ஜனசக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் மறைந்த பிறகு அவர் அமைச்சராக பொறுப்பு வகித்த நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தை கோயலுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com