கம்பம்: தேனி மாவட்டத்தின் கம்பம், கூடலூர் பகுதிகளில் திடீரென்று பெய்த மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தேனி மாவட்டம் கம்பம் கூடலூர் பகுதிகளில் திங்கட்கிழமை மாலை திடீரென்று மேகம் கருத்து மழை பெய்தது சாலை மற்றும் தெருக்களில் மழை வெள்ளம் ஓடியது தொடர் மழை பெய்து கொண்டிருக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர் அதே நேரத்தில் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான வெயில் அடித்த நிலையில் திங்கள்கிழமை பெய்த மழையால் வெப்பம் தணிந்தது, பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.