மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ள கொய்னா அணை பகுதியில் 2.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறுகையில்,
செவ்வாய்க்கிழமை காலை 7.16 மணியளவில் சதாரா மாவட்டம் கொய்னா அணை பகுதியில் 2.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவித்தனர்.
கொய்னா அணையில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அந்த நிலநடுக்கமானது உணரப்பட்டது என கூறினர்.