மகாராஷ்டிர மாநில அமைச்சரவை பாலாசாகேப் தாக்கரே விபத்து காப்பீட்டு திட்டத்திற்கு புதன்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கூறுகையில்,
மகாராஷ்டிர மாநில அமைச்சரவை பாலாசாகேப் தாக்கரே விபத்து காப்பீட்டு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் விபத்தில் காயமடைபவர்களுக்கு உடனடியாக மருத்துவ சேவை கிடைக்கும்.
இந்த திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 30 ஆயிரம் நிதி அல்லது மருத்துவமனைகளில் இலவச மருத்துவம் கிடைக்கும் என கூறினார்.