ஜார்கண்டில் மின்னல் தாக்கி 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்ததாக வியாழக்கிழமை காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஜார்க்கண்டின் கிரிடிஹ் மாவட்டத்தில் புதன்கிழமை மாலை பாகோடர், பெங்காபாத் மற்றும் பச்சம்பா காவல் நிலைய பகுதிகளில் மின்னல் தாக்குதலில் 16 வயது சிறுமி, 15 வயது சிறுவர் மற்றும் 26 வயது இளைஞர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இதில், சிறுவர் திறந்தவெளியில் இருக்கும் போதும், இளைஞர் வயலில் இருந்து திரும்பும் போதும் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவித்தனர்.