கேரளத்தில் புதிதாக 4,531 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 4,531 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

கேரளத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 4,531 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக 4,531 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 1,22,395 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 10 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 491 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 2,986 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் 87,590 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், தற்போது 34,314 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com