சாத்தான்குளம் அருகே இளைஞரை காரில் கடத்தி கொலை: காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்

சாத்தான்குளம் அருகே  இளைஞரை காரில் கடத்தி கொலை செய்த சம்பவத்தில் உடந்தையாக செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட தட்டார்மடம்  காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். 
சாத்தான்குளம் அருகே இளைஞரை காரில் கடத்தி கொலை: காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்


சாத்தான்குளம் அருகே  இளைஞரை காரில் கடத்தி கொலை செய்த சம்பவத்தில் உடந்தையாக செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட தட்டார்மடம்  காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகிலுள்ள சொக்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த  செல்வன் (30) என்ற இளைஞர் காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக  தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் முழு உடந்தையாக இருந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் உட்பட மேலும் சிலர் மீது (107, 336, 302, 364) கொலை வழக்கு உட்பட 4 பிரிவுகளில் நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com