
கோப்புப்படம்
தில்லியில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 2,548 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
இன்று புதிதாக 2,548 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 2,49,259 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 32 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 5014 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 3,672 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் எண்ணிக்கை 2,13,304 ஆக உள்ளது. தற்போது 30,941 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.