சூடானில் கடந்த சில மாதங்களாக பெய்து வரும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 124 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக சூடானில் பெய்து வரும் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 124 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரு லட்சம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
சூடானின் பாதுகாப்பு கவுன்சில் 3 மாதங்களாக தேசிய அவசரகால நிலையை அறிவித்துள்ளது. இதனிடையே இந்த மாத தொடக்கத்தில் "இயற்கை பேரழிவு மண்டலமாக" சூடானை அறிவித்துள்ளது என நாட்டின் இறையாண்மை கவுன்சிலின் தலைவர் அப்தெல் பத்தா அல் புர்ஹான் தெரிவித்தார்.