அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை சுமார் ஒருமணி நேரம் மிதமான மழை பெய்தது.
அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டப்பகுதிகளில் திங்கள்கிழமை பிற்பகல்வரை கடும் வெயில் சுட்டெரித்தது. பின்னர் சுமார் 4 மணி முதல் கருமேகங்கள் திரண்டு சுமார் 4.15 மணிமுதல் பலத்த இடிமின்னலுடன் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் வரை மிதமான மழை பெய்தது.
அதிகம் காற்று வீசாமல் பெய்த இம்மழையால் சாலைகளில் வெள்ளநீர் திரண்டு ஓடியது. மழைக்குப்பின் இதமான குளிர்ந்த தட்ப வெப்பம் நிலவியது. அருப்புக்கோட்டைபகுதிகளில் தொடர்ந்து அடுத்தடுத்து கடந்த 3 நாட்களாக மழை பெய்துவருவதால், நீர்நிலைகளில் நீர் பெருகுமென அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.