கேரளம், அசாம் மற்றும் மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. அதிகபட்சமாக அசாமில் இதுவரை 84.96 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
கேரளம்:
கேரளத்தில் உள்ள 140 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. மொத்தம் 74.05 சதவிகித வாக்குகள் பதிவாகின.
அசாம்:
அசாமில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று 40 தொகுதிகளுக்கு நடைபெற்ற இறுதி கட்ட வாக்குப்பதிவில் 84.96 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.
மேற்குவங்கம்:
மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற 3ஆம் கட்டத்தில் 84.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.