கரோனாவிலிருந்து மீண்ட சச்சின் டெண்டுல்கர் வியாழக்கிழமை வீடு திரும்பினார்.
47 வயதான ஓய்வுபெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த மார்ச் 27ஆம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், கரோனாவிலிருந்து மீண்ட சச்சின், மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்பினார். இருப்பினும், இன்னும் சில நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ராய்ப்பூரில் சமீபத்தில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு உலக தொடரில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய லெஜன்ட்ஸ் அணி, இறுதிச்சுற்றில் இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்தப் போட்டியில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர், யூசுப் பதான், பத்ரிநாத், இர்பான் பதான் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.