புதுச்சேரியில் கரோனா பரவலை குறைக்க பல்வேறு தரப்பினர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநிலங்களும் தடுப்பூசி செலுத்தும் பணியை வேகப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புதுவை மாநிலத்தில் பல்வேறு தரப்பினர்களுக்கு தடுப்பூசி செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 9-ல் உணவக ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு, ஏப்ரல் 10-ல் வங்கி, எல்ஐசி ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு, ஏப்ரல் 13-ல் பான்லே பால்விநியோக ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு, ஏப்ரல் 15-ல் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்துள்ளனர்.