தில்லி தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
தில்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையை சேர்ந்த 37 மருத்துவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மருத்துவமனை தலைவர் டிஎஸ் ரானாவை, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனைக்கு அழைத்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது, மருத்துவர்களுக்கு எவ்வாறு கரோனா பரவியது, மேலும் பரவாமல் இருக்க எடுக்க வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவுள்ளனர்.